search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எஸ் டோனி"

    • ஒரு கேப்டனாக எனது முக்கிய பணி என்பது சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வருவதுதான்.
    • உங்கள் அணி வீரர்களிடம் இருந்து சிறந்ததை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கு முன்னதாக சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியை ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வெகுவாக பாராட்டி உள்ளார்.

    இது குறித்து பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    நீங்கள் எந்த அணிக்காக விளையாடுகிறீர்கள் என்பதைப் பாருங்கள், நீங்கள் ஒரு கேப்டனாக இருந்தாலும் அல்லது ஒரு வீரராக இருந்தாலும், எப்போதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். எங்கள் ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், அது மிகவும் நல்லது.

    ஒரு கேப்டனாக எனது முக்கிய பணி என்பது சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வருவதுதான். அத்துடன் எதிரணியின் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் மகேந்திர சிங் டோனியை போன்ற ஒருவரை என்னால் தந்திரமாக மிஞ்ச முடியும் என்று நான் நினைக்கவில்லை.

    அதனால் அவரை புத்திசாலித்தனமாக முந்த முயற்சி எதுவும் பண்ண மாட்டேன். டோனி ஒரு மகத்தான வீரர். எனவே உங்கள் அணி வீரர்களிடம் இருந்து சிறந்ததை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதுவே முழுமையாக வேலை செய்யும் என்று நான் நம்புகிறேன்.

    என்று கூறியிருக்கிறார்.

    • ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிகமுறை 20 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்.
    • டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த ஆசியாவின் முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.

    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல் தொடரின் 13-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 52 ரன், பண்ட் 51 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்காக இறுதிக்கட்டத்தில் போராடிய டோனி அதிரடியாக ஆடி 16 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

    இதன்மூலம் டோனி பல சாதனைகளை படைத்துள்ளார். முதலாவதாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிகமுறை 20 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டோனி 9 முறையும் ரோகித் 8 முறையும் ரிஷப் பண்ட் 6 முறையும் அடித்துள்ளனர்.

    மேலும் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த ஆசியாவின் முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இதை தவிர ஐபிஎல் தொடரில் 19 மற்றும் 20-வது ஓவர்களில் 100 சிக்சர்கள் விளாசிய முதல் விரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். 57 சிக்சர்களுடன் பொல்லார்ட் 2-வது இடத்தில் உள்ளார்.

    • நேற்றைய போட்டியில் டோனி 16 பந்தில் 37 ரன் எடுத்தார்.
    • ஆட்டத்தின் கடைசி ஓவரில் டோனி 4,6,0,4,0,6 என 20 ரன்கள் விளாசினார்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய முதல் 2 ஆட்டத்தில் டோனி களம் இறங்கவில்லை. இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஆனால் விசாகப்பட்டினத்தில் சி.எஸ்.கே. மோதிய நேற்றைய 3-வது போட்டியில் டோனி களம் இறங்கி தனது அதிரடியான ஆட்டம் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சி.எஸ்.கே. தோற்றாலும் டோனியின் அபாரமான ஆட்டத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

    23 பந்தில் 72 ரன் தேவை என்ற கடினமான நிலையில் இருந்த போதுதான் டோனி 8-வது வீரராக களம் வந்தார். முகேஷ்குமார் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவர் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் கேட்சில் இருந்து தப்பினார். அதற்கு அடுத்த ஓவரில் கலீல் அகமதுவின் கடைசி பந்தில் டோனி சிக்சர் அடித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் அவர் 4,6,0,4,0,6 என 20 ரன்கள் விளாசினார். அவர் 16 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும்.

    3 சிக்சர்கள் மூலம் டோனி ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 4-வது இடத்தில் இருந்த கோலியை முந்தினார். டோனி 242 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும், கோலி 241 சிக்சர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் டோனியை கோலி முந்தினார். தற்போது அவரை டோனி பின்னுக்கு தள்ளியுள்ளார். கோலியோ முதல் வரிசையில் ஆடுகிறார். ஆனால் டோனி களத்தில் இறங்கும் வாய்ப்பு அரிதாகவே இருக்கிறது.

    கிறிஸ் கெய்ல் (357 சிக்சர்), ரோகித் சர்மா (261), டிவில்லியர்ஸ் (251) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    • சிஎஸ்கே 20 ரன்னில் தோல்வியடைந்தது.
    • டோனி கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன் விளாசினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    கடந்த இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்யாத எம்எஸ் டோனி இந்த போட்டியில் களம் இறங்கினார். அவர் களத்திற்கு வரும்போது 23 பந்தில் 70 ரன்கள் தேவைப்பட்டது, முதல் பந்தை பவுண்டரி விரட்டி அசத்தினார்.

    எம்எஸ் டோனி களம் இறங்கியதும் ரசிகரக்ள் டோனி டோனி என கோஷமிட்டனர். விசாகப்பட்டினம் டெல்லியின் ஹோம் கிரவுண்ட் ஆகும். ஆனால் நேற்று கேலரியில் எங்கு பார்த்தாலும் மஞ்சளாக காட்சியளித்தது. அந்த அளவிற்கு சிஎஸ்கே ரசிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

    வெற்றியோ... தோல்வியோ... டோனி டோனி என கோஷம் எழுப்பினர். அதற்கு ஏற்ப டோனியும் சிக்ஸ், பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன்கள் விளாசினார்.

    மொத்தம் 16 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் எம்எஸ் டோனி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டிரைக் ரேட் 231.25 ஆகும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையிலும் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். இதனால் வெற்றி பெற்ற அணி எது என்ற குழப்பம் கூட டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

    போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதோ இல்லையோ... அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் டோனி ஆட்டத்தை பார்க்க வந்தோம். என்ஜாய் செய்தோம் என ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அதற்கு ஏற்பட டோனியின் ஆட்டமும் அமைந்தது.

    • டெல்லி அணியின் பிரித்வி ஷா விக்கெட்டை டோனி கேட்ச் பிடித்து அசத்தினார்.
    • விக்கெட் கீப்பராக 300 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்தார்.

    விசாகப்பட்டினம்:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 5 கோப்பைகளை வென்றுள்ள மகேந்திர சிங் தோனி, 17 சீசனில் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டுள்ளார்.

    இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பிரித்வி ஷா விக்கெட்டை கேட்ச் பிடித்து அசத்தினார் டோனி. இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் ஸ்டம்பிங் மற்றும் கேட்ச் மூலம் விக்கெட் கீப்பராக 300 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார். இதுவரை 213 கேட்சுகளும், 87 ஸ்டம்பிங்கும் செய்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் 274 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், 270 விக்கெட்டுகளுடன் டி காக் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் போராடி தோற்றது.
    • மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது.

    ஐதராபாத்:

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது. முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் போராடி தோற்றது.

    இதேபோல் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது. இதனால் முதல் வெற்றியை பெற இரு அணிகளும் போராடும்.

    இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். அது என்னவென்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 200-வது போட்டியில் களமிறங்க உள்ளார். இதற்கு முன்பு விராட் கோலி மற்றும் டோனி மட்டுமே ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 200 போட்டியில் விளையாடிய வீரர்கள் ஆவர். அந்த பட்டியலில் ரோகித் சர்மாவும் இணையவுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் 2008-ம் ஆண்டு அறிமுகமான ரோகித் முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணிக்காக 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டும் வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்தார். 2009-ம் அந்த அணி கோப்பையை வெல்ல ரோகித் சர்மா முக்கிய பங்காற்றினார். அந்த அணிக்காக 45 போட்டியில் விளையாடி 1170 ரன்கள் குவித்தார். அதன் பிறகு 2011-ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து தற்போது வரை விளையாடி வருகிறார்.

    2013-ல் ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரோகித், கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போட்டி முடிவில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
    • ரஹானே 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய (மார்ச் 26) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த குஜராத் அணி போட்டி முடிவில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. சென்னை சார்பில் துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 46 ரன்களை குவித்து நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த ரஹானே 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

     


    அடுத்து வந்த ஷிவம் தூபே அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 51 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் டேரில் மிட்செல் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த நிலையில், 207 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    சேசிங்கில் குஜராத் அணி 55 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மிட்செல் பந்து வீச்சை எதிர்கொண்டார் விஜய் சங்கர். இந்த பந்து அவரது பேட்-இல் டிப் ஆகி விக்கெட் கீப்பருக்கு கேட்ச் ஆக மாறியது. கீப்பிங்கில் நின்றிந்த எம்.எஸ். டோனி தன்னை விட பந்து சற்று விலகியே சென்ற போதிலும், அபாரமாக பாய்ந்து கேட்ச் பிடித்தார்.

    இந்த சீசன் துவங்கும் முன்பிருந்தே, எம்.எஸ். டோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவாரோ என்ற பேச்சும், அவரது உடல்நிலை குறித்த சந்தேகமும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருந்தது வந்தது. இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில், எம்.எஸ். டோனியின் நேற்றைய கேட்ச் அமைந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2007-ல் பிசிசிஐ தனக்கு கேப்டன் பதவியை வழங்க தயாராக இருந்தது.
    • என்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். முகமது அசாருதீனை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்த நிலையில், 1996-ல் இருந்து 1999 வரையிலான காலக்கட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் கேப்டனாக பணியாற்றினார்.

    ஆனால் அவர் கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணியும் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவரது தனிப்பட்ட ஆட்டமும் சரிவை கண்டது. இதனால் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு வீரராக தொடர்ந்து விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

    சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு சவுரவ் கங்குலி கேப்டன் பதவியை ஏற்று, அணியில் பல மாற்றம் செய்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து எதிர்கால அணியை உருவாக்கினார்.

    அப்போதுதான் எம்.எஸ். டோனி இந்திய அணியில் அறிமுகம் ஆனார். குறுகிய வருடத்திற்குள் கேப்டன் பதவியை ஏற்று ஜொலித்தார்.

    எம்.எஸ். டோனியின் தலைமையின் கீழ் சச்சின் தெண்டுல்கர் நீண்ட காலம் விளையாடியுள்ளார். எம்.எஸ். டோனியை கேப்டனாக்க பரிந்துரை செய்தது சச்சின் தெண்டுல்கர்தான் என்பது எல்லோருக்குத் தெரியும். தற்போது அதற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் "2007-ல் பிசிசிஐ கேப்டன் பதவி வாய்ப்பை எனக்கு வழங்கியது. ஆனால், என்னுடைய உடல் அப்போது மிகவும் மோசமாக இருந்தது.

    டோனியுடன் மனநிலை மிகவும் நிலையானது. அமைதியானவர். சரியான முடிவை எடுப்பார் என்ற அவர் மீதான என்னுடைய அவதானிப்பு மிகவும் சிறந்த வகையில் இருந்தது. இதனால் அவரை கேப்டன் பதவிக்கு பரிந்துரை செய்தேன்" இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    • இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    • மும்பை ரசிகர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட காலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட எம்.எஸ். டோனி தனது பதவியை ருதுராஜ் கெய்க்வாட்-இடம் கொடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த எம்.எஸ். டோனிக்கு இந்திய வீரர் ரோகித் சர்மா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இன்ஸ்டா ஸ்டோரியில் மும்பை ஜெர்சியில் ரோகித் சர்மா எம்.எஸ். டோனிக்கு கை கொடுக்கும் புகைப்படம் மற்றும் கை குலுக்கும் எமோஜி இடம்பெற்று இருக்கிறது.

     


    முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்புக்கு மும்பை ரசிகர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மும்பை அணியின் சமூக வலைதள கணக்குகளை பின்பற்றுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது.

    நாளை 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் துவக்க விழா மற்றும் முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

    • சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி இருந்து வந்தார்.
    • அணியில் என்னை வழிநடத்த பலர் உள்ளனர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 22) துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து, இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில், சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். புதிய கேப்டனை எம்.எஸ். டோனியே தேர்வு செய்த நிலையிலும், இந்த அறிவிப்பு சென்னை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சென்னை அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது பொறுப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

     


    அப்போது பேசிய அவர், "அருமையாக இருக்கிறது. இது ஒரு பாக்கியம். இது மிகப்பெரிய பொறுப்பு, ஆனாலும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் பக்கம் பலரும் அனுபவம் மிக்கவர்கள் என்பதால், நான் அதிகம் எதையும் செய்ய வேண்டியிருக்காது. மேலும் எம்.எஸ். டோனி, ஜடேஜா, ரகானே ஆகியோர் என்னை வழிநடத்த அணியில் உள்ளனர். இதனால் நான் அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை," என்று தெரிவித்தார்.

    • சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புதிய கேப்டன் நியமனம் குறித்து சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்தார்.

    சென்னை:

    ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் நாளை சென்னையில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங் அணி கேப்டனாக இருந்த டோனி மாற்றப்பட்டு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இந்நிலையில், சி.எஸ்.கே. கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி மாற்றப்பட்டது ஏன் என்பது சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பிளமிங் கூறியதாவது:

    புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என டோனி கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    டோனியின் ஆலோசனைப்படியே ருதுராஜ் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். வருங்கால திட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். ருதுராஜை கேப்டனாக்கும் முடிவுக்கு ஜடேஜாவும் முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சீசனில் டோனியின் உடல்தகுதி மிகவும் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி இருந்து வந்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 22) துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து, இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில், சி.எஸ்.கே. அணியின் கேப்டன் பொறுப்பை எம்.எஸ். டோனி ருதுராஜ் கெய்க்வாட்-இடம் ஒப்படைப்பதாக அணி நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு டோனி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐ.பி.எல்.-இல் சென்னை அணி துவங்கப்பட்டதில் இருந்தே சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி செயல்பட்டு வந்தார்.

     


    இடையில், ஒரு சீசனில் ரவீந்திர ஜடேஜா சிறிது காலம் கேப்டனாக செயல்பட்டார். எனினும், எம்.எஸ். டோனி அதே சீசனில் சென்னை அணியை வழிநடத்த துவங்கினார். தற்போது சென்னை அணிக்கு புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கேப்டன் மாறப்போகும் தகவல் தனக்கே தாமதமாகத் தான் தெரியும் என சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஒ. தெரிவித்துள்ளார்.

    2024 ஐ.பி.எல். தொடரின் கேப்டன்கள் பங்கேற்கும் போட்டோஷூட் சமீபத்தில் நடைபெற்றது. அந்த வகையில், போட்டோஷூட் துவங்க சிறிது நேரம் இருக்கும் போது தான், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்ற தகவல் தனக்கு தெரிவிக்கப்பட்டது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    ×